திமுக கூட்டணியினர் ஓட்டு கேட்டு வீடுகளுக்கு வர வேண்டாம் என போஸ்டர் -திமுகவினர் கலக்கம்

கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தபாடி பகுதியில், திமுக கூட்டணியினரை, ஓட்டு கேட்டு வர வேண்டாம் என 500க்கும் மேற்பட்ட வீடுகளில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளதால், திமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

கட்சியினரின் பிரசாரங்களால் தேர்தல் களம் சூடுபிடித்துவரும் நிலையில், இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் இழிவாக பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கி. வீரமணி, கடந்த சில நாட்களுக்கு முன் பகவான் கிருஷ்ணரை இழிவு படுத்தி பேசியுள்ளார். இதை கண்டிக்கும் வகையில் இந்து அமைப்புகள் கண்டனங்களை தெரிவித்து வருவதோடு, இந்துக்களின் வாக்குகளை திமுக கூட்டணிக்கு அளிக்க மாட்டோம் என்று பல்வேறு இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அதன் ஒருபகுதியாக, கோபிசெட்டிபாளையம் அடுத்த கவுந்தபாடி பகுதியில் உள்ள ஜெஜெ.நகர், அரசு மருத்துவமனை சாலை,2வது வார்டு, சிறுவலூர் சாலை, உள்ளிட்ட பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளில், திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியினர் ஓட்டு கேட்டு வீடுகளுக்கு வர வேண்டாம் என பொதுமக்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

Exit mobile version