வேட்பாளரே வராததால் திமுக கூட்டணி கட்சியினர் அதிருப்தி

பெரம்பலூரில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து நடந்த பொதுக் கூட்டத்திற்கு வேட்பாளரே வராதது, தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்திற்கு அவரே வராததால் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் பார்வேந்தர் கலந்து கொள்ளாது உட்கட்சி குளறுபடிகளை எடுத்துரைக்கும் விதமாக அமைந்தது. மேலும், மக்கள் ஆதரவு இல்லாத காரணத்தினால் மேடை வெறிச்சோடி நாற்காலிகள் காலியாக இருந்தன.

Exit mobile version