போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையில் திமுக கூட்டணி கட்சியினர் பிரசாரம்

பெரம்பலூரில், திமுக கூட்டணி கட்சியினர் நடத்திய தேர்தல் பிரச்சாரம் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில், திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து மதிமுக பொது செயலாளர் வைகோ,பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 30 நிமிடங்களுக்கு மேலாக பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் நடைபெற்றது. இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது . இதில் மாணவர்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டனர்.

Exit mobile version