இறுதி ஊர்வலத்தின் பொழுது நடனம் ஆடுவதில் தகராறு : கத்தியால் மிரட்டியவர் கைது

இறுதி ஊர்வலத்தின் பொழுது நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் பலரை மிரட்டியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடியில் மூதாட்டி ஒருவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்பொழுது அங்கிருந்த இளைஞர்கள் மது அருந்திவிட்டு நடனம் ஆடி வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்தவர்களை மிரட்டி அருகில் நின்றிருந்த ஆட்டோவை கத்தியால் சேதப்படுத்தியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அந்த இளைஞரை கைது செய்து பொதுசொத்தை சேதப்படுத்துதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Exit mobile version