பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை

பழனிக்கு பாதயாத்திரை செல்லும் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

திருநெல்வேலி, விருதுநகர், சாத்தூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், பழனிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். இவர்கள் நடந்து செல்லும் பாதைகளில் போதிய கழிப்பறை வசதி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விபத்துக்களை தடுக்கும் விதமாக இரவு நேரத்தில் பாதயாத்திரை செல்லும் தங்களுக்கென பிரத்யேகமாக பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களை அரசு தயாரித்து வழங்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version