எல்லையில் பாகிஸ்தான் ராணுவ முகாம் அழிப்பு

காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ முகாம் ஒன்றை இந்திய ராணுவத்தினர் தாக்கி அழித்துள்ளனர்.

காஷ்மீரின் எல்லை மற்றும் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது இந்திய ராணுவத்தினரால் இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அக்னூர் பகுதியில் செயல்பட்டு வந்த பாகிஸ்தான் ராணுவ முகாமை இந்திய ராணுவத்தினர் தாக்கி அழித்துள்ளனர்.

இதனிடையே பூஞ்ச் மற்றும் நவ்செரா பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறிய தாக்குதல்களில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Exit mobile version