தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 403 பேருக்கு பணி நியமன ஆணை – துணை முதல்வர் வழங்கினார்

தேனி அருகே நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உள்ளிட்டவை இணைந்து நடத்திய தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொண்டன.

ஆண்கள் 2,044 பேரும், பெண்கள் 2, 244 பேரும் திருநங்கைகள் 4 பேரும் இந்த முகாமில் கலந்து கொண்டனர். இதை அடுத்து, தேர்வு செய்யப்பட்ட 403 நபர்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரும் பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

Exit mobile version