ஈரோடு நகரில் அதிநவீன கேமராக்கள் பொருத்த முடிவு

ஈரோடு நகரில் குற்றசம்பவங்களை குறைக்கும் வகையில் பொருத்தப்பட்ட அதிநவீன கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார். ஈரோடு நகர் முழுவதும் வாகனங்களை கண்காணிக்க அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக 11 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவைகளின் செயல்பாட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினந்தோறும் சராசரியாக மாவட்டம் முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறும் 2 ஆயிரத்து 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படுவதாக கூறினார்.

Exit mobile version