அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தை வாடகைக்கு விட முடிவு

தெற்காசியாவிலேயே பெரிய நூலகங்களில் ஒன்று சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். இங்கு லட்சக்கணக்காண புத்தகங்கள் படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த நூலகத்தில் உள்ள பல் நோக்கு கலையரங்கம் தினசரி வாடகைக்கு விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பொது நூலக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கலையரங்கம் தினசரி வாடகைக்கு விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அரங்குஅரசு நிகழ்ச்சிகள் , கலை , இசை நிகழ்ச்சிகள் , வெளி நாட்டு தூதரக நிகழ்ச்சிகளுக்கு நாள் வாடகைக்கு விடப்படும். மேலும்இந்த நூலக கலையரங்கை பயன்படுத்த நாள் ஒன்றுக்கு 2,31,224 ரூபாய் வாடகையாக வசூல் செய்யப்படும் என அரசு பொது நூலக இயக்குனர் அறிவித்துள்ளார்.

Exit mobile version