சாலையோரம் கிடந்த குப்பைகளை தின்ற 2 பசுக்கள் மரணம்

காரைக்குடி பேருந்து நிலையம் அருகே சாலை அருகே கொட்டப்பட்ட குப்பைகளை தின்ற இரண்டு பசுக்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருத்து நிலையம் அருகே சாக்கு மூட்டையில் யாரோ சிலர் குப்பையை சாலையோரம் போட்டுள்ளனர். இதை இரண்டு பசு மாடுகள் தின்றுள்ளன. சிறிது நேரத்தில் இரண்டு பசுக்களும் இறந்தன.

உயிரிழந்த பசுக்களில் ஒன்று, கன்று ஈன்றுள்ளதால், இறந்த தாய் பசுவை விட்டு பிரியாமல் கன்று அங்கேயே படுத்திருந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. நகராட்சி பணியாளர்கள் இறந்த பசுகளை எடுத்து செல்ல வந்த போது தாய்ப்பசுவை ஏற்றவிடாமல் முட்ட வந்து பாச போரட்டம் நடத்தியது. இச்சம்பவம் அனைவரையும் கண் கலங்க வைத்தது. இதனிடையே பசுக்கள் எதனால் இறந்தன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version