நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது.

குளிர்காலக் கூட்டத் தொடர், 20 நாட்கள் நடைபெற்று, ஜனவரி 8 ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த கூட்டத் தொடரில் 45
மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. இன்று இரு அவைகள் கூடியதும், முன்னாள் பிரதமர் வாஜ்பேயி,
முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார், முன்னாள் எம்.பி.க்கள் போலா சிங், மவுலானா அஸ்ராருல் ஹக், ஷாநவாஸ்
ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு அவைகளும் நாள்
முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

Exit mobile version