புதுச்சேரியில் மே தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்பு

புதுச்சேரியில், அரசு சார்பு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து மே தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி மாநிலத்தில் அரசு சார்பு நிறுவனங்களான சுதேசிபஞ்சாலை, பாப்ஸ்கோ, பாசிக் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். அரசு சார்பு நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்களுக்கு பல மாதங்களாக நிலுவை ஊதியம், போனஸ், பென்ஷன் உள்ளிட்டவைகள் வழங்கப்படாமல் உள்ளதாக தெரிகிறது. இந்தநிலையில் அதனைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் நிலையில் புதுச்சேரியில் உள்ள சுதேசி பஞ்சாலை அருகே 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிலாளர் தினத்தை கருப்பு தினமாக அனுசரித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Exit mobile version