காட்டுத் தீயின் அபாயம் நீங்கியதாக வனத்துறையினர் மகிழ்ச்சி

உதகையை அடுத்த முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் கனமழை பெய்ததால், காட்டுத் தீயின் அபாயம் நீங்கி இருப்பதாக வனத்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி காரணமாக வன விலங்களுக்கு தொட்டிகளில் நீர் நிரப்பியும், காட்டுத்தீ பரவாமல் இருக்க, தீத்தடுப்பு கோடுகளும் அமைக்கும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முதுமலை வெளிப்புற வனப்பகுதியில் திடீரென சுமார் ஒரு மணி நேரம் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால், வனப் பகுதியில் நிலவி வந்த வெப்பம் தணிந்து, காட்டுத் தீயின் அபாயம் நீங்கியுள்ளது. வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்ட தொட்டிகளில் மழை நீர் நிரம்பியுள்ளதால் வனத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version