தினசரி பாதிப்பு 33 ஆயிரத்தை தாண்டியது

தமிழ்நாட்டில், தினசரி கொரோனா பாதிப்பு, தொடர்ந்து இரண்டாவது நாளாக 33 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளி மாநிலத்தவர் 9 பேர் உள்பட 33 ஆயிரத்து 181 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 19 ஆயிரத்து 342 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 19 ஆயிரத்து 8 பேர் ஆண்கள் என்றும், 14 ஆயிரத்து 173 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 6 ஆயிரத்து 247 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 934 ஆக அதிகரித்துள்ளது.

சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் 3 ஆயிரத்து 166 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 41 பேரும், திருவள்ளூரில் ஆயிரத்து 835 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். திருச்சியில் ஆயிரத்து 569 பேரும், ஈரோட்டில் ஆயிரத்து 232 பாதிக்கப்பட்டுள்ளனர்.

21 ஆயிரத்து 317 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 311 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்

 

தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்

 

Exit mobile version