இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றின் ஒரு நாள் பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி இருப்பது நாட்டு மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

 

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 56 லட்சத்து 16 ஆயிரத்து 130 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 2 ஆயிரத்து 23 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது 21 லட்சத்து 57 ஆயிரத்து 538 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 32 ஆயிரத்து 76 ஆயிரத்து 39 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை 13 கோடியே ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 310 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version