முதலமைச்சர் பிரசாரம் செய்யவுள்ள பகுதிகளை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி. சண்முகம் போட்டியிடவுள்ள நிலையில், முதலமைச்சர் பிரசாரம் செய்யவுள்ள பகுதிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் ஆய்வு செய்தார். வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை தனது பிரசாரத்தை துவங்குகிறார்.

ஆகஸ்ட் 2ம் தேதி அணைக்கட்டு பகுதியில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதற்கான இடங்களை தேர்வு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இதனை ஆய்வு செய்தார். மேலும், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

Exit mobile version