கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி மற்றும் மகளே கொலை செய்த கொடூரம்!!

விழுப்புரம் அருகே கோயில் பூசாரி கொலை வழக்கில் கைதானவர்கள், கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்ததால் கொலை செய்தாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் வடவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தனசேகரன் என்பவர் கோயில் பூசாரியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி அவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பூசாரியின் உடலை மீட்ட காவல்துறையினர், கொலைக்கான காரணம் குறித்து அவரின் மனைவி ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். அதில் ராஜேஸ்வரிக்கு அதே பகுதியை சேர்ந்தவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்துள்ளது. மகள் சத்யாவும், திருமணமான 6 மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து வந்ததாகவும், அவருக்கும் முருகவேல் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு குழந்தை உள்ளதாகவும் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

 

இதனால் கணவர் தனசேகரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாகவும், சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த கணவருடன் ஏற்பட்ட தகராறில், மகள் சத்யா அப்பாவின் கழுத்தில் கத்தியால் குத்தியதில் மயக்கமடைந்ததாகவும், இதையடுத்து கணவரின் கழுத்தை அருவாமனையல் அறுத்து கொலை செய்தாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். கொலைக்கான தடயங்களை அழிக்கவே மகளின் கள்ளக்காதலனை உதவிக்கு அழைத்ததாகவும் ராஜேஸ்வரி கூறியுள்ளார். இதனையடுத்து ராஜேஸ்வரி, மகள் சத்யா, கள்ளதொடர்பில் இருந்த முருகவேல் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

 

Exit mobile version