மத்திய பிரதேசம் அமைச்சரவையை தேர்வு செய்வதில் நெருக்கடி

மத்தியப் பிரதேச அமைச்சரவை குறித்து இரண்டு, மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும் என அம்மாநில முதலமைச்சர் கமல் நாத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல் நாத் அண்மையில் பதவியேற்றார். முக்கிய தலைவர்கள் பலரும் தங்களது ஆதாரவாளர்களுக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவதால் அமைச்சரவையை தேர்வு செய்வதில் கமல் நாத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், அமைச்சரவை குறித்து இன்னும் இரண்டும் மூன்று நாட்களில் முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version