தீவிரவாத சம்பவத்தையடுத்து பாகிஸ்தானிற்கு முற்றும் நெருக்கடி

தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 200 சதவீதமாக, சுங்க வரியை மத்திய நிதியமைச்சகம் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். தீவிரவாத தாக்குதலுக்கு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

புல்வாமா தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, வர்த்தக ரீதியில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா நீக்கியது. அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான சுங்கவரியை, 200 சதவீதமாக அதிகரித்து, மத்திய நிதியமைச்சகம் உடனடியாக அமல்படுத்தியுள்ளது.

Exit mobile version