நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு ரூ.47,609 கோடி டாலராக உயர்வு

நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு 47 ஆயிரத்து 609 கோடி டாலராக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இம்மாதம் முதல் வாரத்தில் அன்னிய செலாவணி இருப்பு 47 ஆயிரத்து, 300 கோடி டாலராக இருந்தது. தற்போது 309 கோடி டாலர் அதிகரித்து, 47 ஆயிரத்து, 609 கோடி டாலராக அன்னிய செலாவணி இருப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் இருப்பு 34.4 கோடி டாலர் அதிகரித்து, 2 ஆயிரத்து 912 கோடி டாலராக அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் 2 லட்சம் கோடி ரூபாய் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Exit mobile version