நாட்டின் ஏற்றுமதி முன்னேற்றம் அடைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

நாட்டின் ஏற்றுமதி கடந்த 7 மாதங்களில் முதல் முறையாக பிப்ரவரி மாதத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நாட்டின் ஏற்றுமதி 2 புள்ளி 91 சதவீதம் வளர்ச்சி கண்டு 2 ஆயிரத்து 765 கோடி டாலராக காணப்பட்டது என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. இறக்குமதி பொறுத்த வரை கடந்த 9 மாதங்களில், கடந்த பிப்ரவரி மாதம் 2 புள்ளி 48 சதவீதமாக அதிகரித்து 3 ஆயிரத்து 750 கோடி டாலராக காணப்பட்டது என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் மட்டும் வர்த்தக பற்றாக்குறை 985 கோடி டாலராக அதிகரிப்பைக் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version