ஊழல் கறை தூத்துக்குடியில் பட்டு விடக்கூடாது : தமிழிசை

ஊழல் கறை தூத்துக்குடியில் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்ப்பதாக பாஜக தமிழக தலைவரும் தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன், தூத்துக்குடி சிவன்கோயில் முன்பிருந்து தனது பிரசாரத்தை துவக்கினார். முன்னதாக சிவன்கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த அவருக்கு அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து பிரசாரத்தை மேற்கொண்ட தமிழிசை, தூத்துக்குடி தூய்மையாக இருக்க வேண்டும், வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகவே தான் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் கறை தூத்துக்குடியில் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து போட்டியிடுவதாகவும், திகார் சிறை எந்த பக்கத்தில் உள்ளது என்பது தெரியாது என்றும் அவர் கூறினார்.

Exit mobile version