முக்கொம்பில் ரூ.387 கோடி மதிப்பில் கதவணை கட்டும் பணி

முக்கொம்பில் 387 கோடி ரூபாய் செலவில் புதிய கதவனை அமைக்கும் பணியை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் .

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். குறிப்பாக திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 387 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள கதவணைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 39 கோடி ரூபாய் செலவில் கொள்ளிடம் கதவணையை பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும் 241 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ள பல்வேறு பணிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Exit mobile version