கோவை கிணத்துக்கடவு அருகே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்

கோவை கிணத்துக்கடவு அருகே மேம்பாலம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றனர்.

கிணத்துக்கடவு அடுத்த முள்ளுப்பாடி ரெயில்வே கேட் பகுதியில், 42 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே நேற்று 65 மீட்டர் நீளமும், 9 மீட்டர் அகலமும், 500 டன் எடையும் உள்ள இராட்சத இரும்பு பாலம், முன்பே அமைக்கப்பட்ட கான்கிரீட் தூண்கள் மீது நிலைநிறுத்தப்பட்டது. தற்போது இரும்பு பாலத்தை நகர்த்த அமைக்கப்பட்ட, தண்டவாளத்தை நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வேலைகள் இன்னும் 1 மாத காலத்தில் முடிக்கப்பட்டு, மேம்பாலம் வழியாக போக்குவரத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் கோவை – பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version