டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது

மக்களவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ளது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தேசிய மற்றும் மாநிலங்கள் அளவில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, வேட்பாளர் பட்டியல்களும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காங்கிரசின் செயற்குழுக்கூட்டம் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் மக்களவை தேர்தலையொட்டி செய்ய வேண்டிய முன் நடவடிக்கைகள், தேர்தல் பிரசாரங்கள், ராகுல், பிரியங்காவின் தேர்தல் சுற்றுப்பயணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Exit mobile version