தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகங்கள் அதிகம்-ராமதாஸ்

தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகங்கள் அதிகம் என்றும் அதற்கான பட்டியல்கள் அதிகம் உள்ளது என்றும் பாமக நிறுவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மக்களவை வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மற்றும் பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர்கள் மயில்வேல் மற்றும் லோகிராஜன் ஆகியோரை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் பேசிய ராமதாஸ், தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகங்கள் அதிகம் என்றும் அதற்கான பட்டியல்கள் அதிகமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாமகவின் தேர்தல் அறிக்கையை 90 சதவிகிதம் திமுக கட்சி காப்பி அடித்துள்ளதாக தெரிவித்தார். பிரதமர் மோடி தலைமையிலான ஜனநாயக கூட்டணி 350 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். கூட்டத்தில் அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகமாக கலந்து கொண்டனர்.

Exit mobile version