ஹரியானாவில் அதிவிரைவுச் சாலை திட்டம் தாமதமானதற்கு காங்கிரஸ் அரசே காரணம் – மோடி

ஹரியானாவில் அதிவிரைவுச் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, திட்டம் தாமதமானதற்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என்று குற்றம்சாட்டினார்.

ஹரியானா மாநிலம், குண்ட்லி-மானேஸர்-பல்வால் பகுதிகளை இணைக்கும் அதிவிரைவு சாலையை, குருகிராமில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பல்லாப்கர்-முஜேசரை இணைக்கும் மெட்ரோ வழித்தடத்தை திறந்து வைத்த அவர், ஸ்ரீ விஷ்வகர்மா திறன் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லையும் நாட்டினார். பின்னர் பேசிய அவர், விரைவுச் சாலைப் பணி, முந்தைய காங்கிரஸ் அரசினாலேயே தாமதமானதாக குற்றம் சாட்டினார்.

Exit mobile version