இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்: 9 பேர் மீது வழக்குப் பதிவு

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள் சூறையாடப்பட்ட வழக்கில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், தென்னவனூரில் கடந்த 16ஆம் தேதி, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் திபாகர் என்பவரது வீடு சூறையாடப்பட்டது. அதற்கு எதிர்வினையாக பாரதி ராஜ் என்பவர், தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, பாரதி ராஜ் அளித்த புகாரின் பேரில், திபாகர், அவரது சகோதரி செல்வி உள்பட 9 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தொடர்புடைய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பதற்றத்தை தவிர்க்க தென்னவனூர், எல். கருங்குளம் கிராமங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version