ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பொய்யாமொழி அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், தன்னார்வலர்கள், ஊர் பொது மக்களின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட வகுப்பறைகளுடன் ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பார்வையிட்டார். தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தி அவர், இந்த வசதிகளை ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் லியாகத், வட்டார கல்வி அலுவலர் ராஜலட்சுமி மற்றும் பொய்யாமொழி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version