கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் – ஜி.கே.வாசன்

அதிமுகவுடன் கூட்டணி குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைவது குறித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, தமாகா கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன், அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அமைச்சர்களுடனான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வாசன், அதிமுகவுடனான கூட்டணி குறித்து நாளை காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார்.

Exit mobile version