காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் யாரும் இல்லாததால் கூட்டணிக் கட்சியினர் அதிருப்தி

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் தொண்டர்கள் யாரும் இல்லாததால் கூட்டணிக் கட்சியினர் அதிருப்தியடைந்தனர். பொன்னேரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி உரையாற்றும்போது தொண்டர்கள் யாரும் இல்லாததால் கூட்டணிக் கட்சியினர் கடும் அதிருப்தியடைந்தனர்.

கூட்டணி கட்சியை சேர்ந்த சில நிர்வாகிகள் அமர்ந்திருந்த நாற்காலிகள் தவிர மற்ற நாற்காலிகள் எல்லாம் முற்றிலும் காலியாக இருந்ததால் அறிமுக கூட்டம் கலை இழந்து காணப்பட்டது. மேலும் இப்படியே சென்றால் அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிடும் என திமுக கூட்டணிக் கட்சியினர் பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version