கூட்டணி கதவுகள் இன்னும் திறந்து தான் உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்

கமல்ஹாசன், ஸ்டாலின் நடத்தும் கிராமசபை கூட்டங்களால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் அதிக கிளைகளை கொண்ட கட்சி அதிமுக தான் என்றார். அதிமுக அமைத்துள்ள பிரமாண்ட கூட்டணியால், ஸ்டாலின், தினகரன், கமலுக்கு காய்ச்சல் வந்து விட்டதாக விமர்சித்தார். மக்கள் மத்தியில் கமல்ஹாசனுக்கு செல்வாக்கு இல்லை என்றும் தெரிவித்தார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையும் கட்சிகளை வரவேற்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Exit mobile version