நாளை மாலையுடன் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நாளையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில், வரும் 21ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளது. இடைத்தேர்தலில் போட்டிட கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு, அக்டோபர் 3-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதிமுக சார்பில் விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வனும், நாங்குநேரியில் நாராயணனும் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நாளை மாலையுடன் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைகிறது.

Exit mobile version