குடிமராமத்துப் பணிகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்: வருவாய் நிர்வாக ஆணையர்

குடிமராமத்துத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துப் பணிகளையும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளைத் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளுக்காக 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்தப் பணிகள் அனைத்தையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சத்தியகோபால் தெரிவித்தார்.

Exit mobile version