பாரம்பரிய உடைகள் அணிவது குறித்த உத்தரவுக்கு தலைமை செயலக ஊழியர் சங்கம் வரவற்பு

தலைமை செயலக ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருகை தரும் போது பாரம்பரிய உடைகள் அணிந்து வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததற்கு தலைமை செயலக ஊழியர் சங்கம் வரவற்பு தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமை செயலகத்திற்கு வரும் ஆண் ஊழியர்கள் ஆண்கள் பேண்ட், சட்டை அணிந்து வர வேண்டும் என்றும், அதேபோல பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து வரலாம் என்றும் உத்தரவிட்டிருந்தார். அதேபோல பெண்கள் சேலை, துப்பாட்டாவுடன் சுடிதார் அணியவேண்டும் என உத்தரவிட்டிருந்தார். பாரம்பரிய உடைகள் அணிந்து வருவது குறைந்து வரும் நிலையில் தமிழக அரசின் இதுபோன்ற உத்தரவு வரவேற்கத்தக்கது என்று அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version