குமரி மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத் துறைக்கு முதல்வர் கடிதம்

ஈரானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, வெளியுறவுத்துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் ஈரானிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். மீனவர்கள், சவுதி தரைன் பகுதியில் தங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, ஜனவரி 2ம் தேதி, அவர்களை கொள்ளையர்கள் கடத்தியதாகவும், பின்னர், ஜனவரி 7ம் தேதி நடுக்கடலில் விடுவிக்கப்பட்ட மீனவர்களை, ஈரான் கடற்படையினர் சிறை பிடித்ததாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தற்போது ஈரான் கடற்படை வசம் உள்ள 3 மீனவர்களை மீட்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Exit mobile version