பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார் – அமைச்சர் பெஞ்சமின்

பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மிதிவண்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்ததாக ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ,பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் 8 ஆயிரத்து 815 மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்துகொண்டு விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், கல்வியை ஊக்குவிப்பதற்காகவே பள்ளி மாணவர்களுக்கு 16 வகையான திட்டங்களை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டுவந்ததாக புகழாரம் சூட்டினார்.

Exit mobile version