2018 ஆம் ஆண்டிற்கான பசுமை விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்

2018 ஆம் ஆண்டிற்கான பசுமை விருதுகளை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், 2 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் மற்றும் ஆய்வு கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். இதையடுத்து, மாவட்டத்தின் பதுகாப்பிற்காக சிறப்பாக செயலாற்றியமைக்காக 2018 ஆம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை, நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசெண்ட் திவ்யா, முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ், முன்னாள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோருக்கு முதலமைச்சர் வழங்கினார்.

மேலும், மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய தொழில் நிறுவனங்களுக்கான, 2018 ஆண்டிற்கான விருதுகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Exit mobile version