சென்னை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில், பொதுமக்கள் அனைவரும் பயணிக்கலாம்

சென்னை புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில், பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்யலாம் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 7 முதல் 10 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் தவிர்த்து, மற்ற நேரங்களில் சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் அனைவரும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்யலாம் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், புதன்கிழமை முதல் அனைவரும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பயணம் செய்வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னரே பயணச்சீட்டு வழங்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Exit mobile version