டிச.18ம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை-வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக, அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை மையம், வரும் 16, 17, 18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

மேலும் வடமாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வரும் 18ம் தேதி வரை மீனவர்கள் அப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exit mobile version