2000 ரூபாய் நிதியுதவி எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

ஏழைகளுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை தமிழக அதிமுக அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் வறுமைக் கோட்டுக்குகீழ் உள்ளவர்கள் யார் என்பதில் தெளிவான வரையறை இல்லை என எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு விசாரித்தது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் மற்றும் ஏழைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய அரசாணை தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதுகுறித்து ஆராய்ந்த நீதிபதிகள், பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து 2000 ரூபாய் வழங்க தடைக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.

Exit mobile version