உலக அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு

தேசிய அளவில் சிலம்பம் போட்டியில் வென்ற 2 பேர் உலக அளவில் நடைபெறும் சிலம்பம் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.

அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் சிறுவர்களுக்கான போட்டியில் பழநியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கப்பதக்கத்தை வென்றார். அதேபோல ராஜசேகரன் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். மற்றும் சத்திரப்பட்டியைச் சேர்ந்த வெற்றி பெற்ற மாணவர்கள் இருவரும் வருகிற ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள உலக அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள இம்மாணவர்கள் உலக அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்க தேவையான உதவிகள் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version