தயாரிப்பாளர் சங்கத்தின் ஆவணங்கள் உள்ள அறை திறப்பு

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ள நிலையில், உயர்நீதி மன்ற உத்தரவின்படி தயாரிப்பு சங்கத்தின் ஆவணங்கள் இரு தரப்புக்கும் கொடுக்கப்பட்டது. நடிகர் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒரு பிரிவினர் தொடர்ந்த வழக்கு காரணமாக தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றம் சென்ற இவ்வழக்கில், பூட்டிய அலுவலகத்தை சார்பதிவாளர் தலைமையில் திறக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் அறையை திறக்க விஷால் தரப்பு மறுத்து வந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி சார் பதிவாளர் சேகர் தலைமையில் பூட்டிய அறை திறக்கப்பட்டு ஆவணங்களை நகல் எடுத்து இரு தரப்புக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version