மத்திய நீர்வளத்துறையின் செயல் கொதிப்படைய வைத்துள்ளது – முதலமைச்சர் பழனிசாமி கண்டனம்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான வரைவு திட்டத்துக்கு கர்நாடகத்துக்கு அனுமதி அளித்த மத்திய நீர்வளத்துறைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் மேகேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய அவர், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கிய செயல் அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளதாக கூறியுள்ளார். 

கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட முயற்சிப்பது சட்டத்திற்கு விரோதமானது என துனை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய நீர்வளத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு கண்டனம் தெரிவித்தார். 

தீர்மானத்துக்கு முழு மனதாக ஆதரவு – மு.க. ஸ்டாலின்

மேகேதாட்டு அணை தொடர்பாக சட்டபேரவையில் முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தை முழுமனதோடு ஆதரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். பேரவையில் பேசிய அவர், சிறப்புக் கூட்டத்தை கூட்டியதற்கு அவர் நன்றி தெரிவித்தார். 

Exit mobile version