தபால் துறை தேர்வை மாநில மொழிகளில் எழுதுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தபால் துறை தேர்வை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் எழுதுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே வாசன் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு பணியில், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு, தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டுள்ளார். அஞ்சல் துறையில் மாநில மொழிகளை புறக்கணிப்பதை ஏற்க முடியாது என்றும் அறிக்கையில் வாசன் குறிப்பிட்டுள்ளார். 

Exit mobile version