ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

அயோத்தி ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என முடிவு செய்தது.

மேலும், இந்த வழக்கை புதிய அமர்வில் விசாரிப்பதாக அறிவித்தனர். இந்நிலையில், அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது.

Exit mobile version