தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கு -வங்கிகள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்திய வங்கிகள் பலவற்றில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த வழக்கில் நீதிமன்றம் இன்று இறுதி தீர்ப்பு வழங்குகிறது. இதனையொட்டி, சி.பி.ஐ இணை இயக்குநர் சாய் மனோகர் தலைமையில், சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழு, லண்டனுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version