நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான வழக்கு -தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு

தேனி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிரான வழக்கில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர் ராஜன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை, நீதிபதி ராகவேந்திர ரத்தோர் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. கடந்த 10-ம் தேதி நடைபெற்ற விசாரணையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிரான இந்த வழக்கின் தீர்ப்பை, பசுமைத் தீர்ப்பாயம் இன்று வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version