பாரம் தாங்காமல் சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரி

மேட்டூரில் சாலையின் நடுவில் சரக்கு லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோட்டிலிருந்து பெங்களூருக்கு பிளைவுட் ஏற்றிய லாரி வந்து கொண்டிருந்தது. லாரியில் அதிகளவு பிளைவுட் ஏற்றப்பட்டிருந்ததால் நிலை தடுமாறியுள்ளது. இந்தநிலையில் மேட்டூரை அடுத்த நவப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது பாரம் தாங்காமல் லாரி கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த பிளைவுட்கள் சாலையில் சரிந்து விழுந்தன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தினால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Exit mobile version