முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஊரக பகுதிகளில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் 27ஆம் தேதி முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் 156 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. மாலை 5 மணிக்கு பிறகு தேர்தல் நடைபெறும் ஊரக பகுதிகளில் வெளியாட்கள் யாரும் இருக்கக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் நடைபெறும் இடங்களில் வெளியாட்கள் இல்லை என்பதை காவல்துறை மற்றும் தேர்தல் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஊரக பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு பணி ஆணை வழங்குவது உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்கவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, ஊரக உள்ளாட்சி தேர்தலை பாதுகாப்பாக நடத்தி முடிப்பது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

Exit mobile version